- Advertisement -
நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் நேற்று (27) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகைளில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தற்போது மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நாடளாவிய ரீதியில் தேர்தல் தொகுதிகள் ஊடாக போட்டியிடும் வேட்பாளர் தெரிவு இடம்பெறுவதாக கூறியுள்ளார்.
அத்துடன், நேர்முகத் தேர்வின் ஊடாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.