Sri Lanka News Live and Tamil Breaking News

ஊழியர்களை பணிக்கு அழைக்க முடிவு! வெளியாகியுள்ள விசேட தகவல்

0 2

- Advertisement -

எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை திறந்தவுடன் அரச மற்றும் தனியார் ஊழியர்களை சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு பணிக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, முதலாம் திகதி முதல் தனியார் துறை ஊழியர்களை வழக்கம் போல் அழைப்பதை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நிதி அமைச்சில் இன்று மதியம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சகங்களின் செயலாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பஸ் சங்கங்கள், முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

அதன்படி, முதலாம் திகதி முதல் காலை 9 மணிக்கு அரசு ஊழியர்களை அழைக்கவும், காலை 10 மணிக்கு தனியார் துறை ஊழியர்களை அழைக்க அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பயணிக்ககூடிய வகையில், சுகாதார அமைப்புக்கு ஏற்ப ரயில் மற்றும் பஸ் சேவைகளை சமமாக இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் விரைவில் வெளியிடப்படும்.

இதனிடையே, நாட்டின் முழுமையாக திறப்பது குறித்து சுகாதார அமைச்சகம் விரைவில் ஒரு புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிடும் எனவும் கூறப்படுகின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More