- Advertisement -
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான எரிபொருளை வழங்குவதற்கு கனியவள கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் உதய கம்மன்பில, இதனை கூறியுள்ளார்.
நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் படி 8 நாட்களுக்குத் தேவையான எரிபொருளை இன்று விடுவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று மாலைக்குள் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதால் இன்றைய தினம் மின் துண்டிப்பு இடம்பெறாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.