மண்சரிவு அபாயம் காரணமாக நானுஓயாவில் உள்ள ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் 300 மீட்டர் பகுதி இன்று (03) ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக பிரதான வீதிக்கு மேலே உள்ள ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் மண்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.