தூக்க மாத்திரை
ஒரு மனிதன் சாதாரணமாக 7-லிருந்து 8 மணி நேரம் உறங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், சிலப்பேருக்கு தூக்கமாத்திரை போட்டால் தான் தூக்கம் வரும்.
இன்னும் சிலப் பேருக்கு தூக்கு மாத்திரை போட்டாலும் உறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தூக்கமாத்திரை உட்கொள்ளுவதால் வரக் கூடிய பக்கவிளைவுகளை பார்க்கலாம்.
தூக்கம் ஒரு மனிதனுக்கு இயற்கையாக மூளை கொடுக்கும் சமிக்ஞை மூலமாக வர வேண்டும். ஆனால், நாம் அந்த உணர்வை தூக்க மாத்திரையின் மூலம் அந்த சமிக்ஞைகளை குழப்புகிறோம்.
நாள்பட அந்த சமிக்ஞை தானாக தூண்டபடாமல் இந்த மாத்திரை நிரந்தரமாக நமக்கு தேவைப்படும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம்.
தூக்க மாத்திரை உட்கொள்ளுவதால் மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகளை உண்டாகிறது.
தொடர்ந்து இந்த மாத்திரைகள் உட்கொள்ளுதல் உடல் பலகீனமாக உணர்தல், தலைவலி போன்றவைகள் ஏற்படுகின்றன. ஒரு விதமான மனஅழுத்தத்தை இந்த தூக்கமாத்திரைகள் நாளடைவில் கொடுக்கின்றன.
பசி எடுப்பதில் மாறுதலை தருகிறது, நாள் முழுக்க புத்துணர்ச்சி இல்லாமல் இருப்பது போல் உணர வைக்கிறது. மனதை ஒருமைபடுத்த சிரமப்படுவது போன்று உடலளவிலும், மனதளவிலும் நிறையப் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
இயற்கையான முறையில் தூங்குவதற்கான வழிகளை டாக்டரிடம் ஆலோசித்து நன்றாக இரவில் உறங்கி சுகமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள்.