30 வயதிற்கு மேலான ஆண்கள் கட்டாயம் இத செய்யணும் : இதய பிரச்சனைகள், புற்றுநோய், பக்கவாதம், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் போன்ற ஆபத்தான நோய்களால் பெண்களை விட ஆண்கள் அதிகம் இறப்பதாக ஆண்கள் சுகாதார வலையமைப்பு தெரிவிக்கிறது.
அதோடு ஆண்கள் பெரும்பாலும் தங்கள் உடலில் உள்ள நோய்கள் வெளிப்படுத்தும் அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். இப்படி உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளை புறக்கணிப்பதால், அது முற்றிய நிலையில் மருத்துவரை அணுகி, சரியான சிகிச்சை அளிக்கமுடியாமல் போகிறது.
மேலும் ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தை கண்காணிப்பதிலும், கவனித்துக் கொள்வதிலும் கவனக்குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தான் பெண்களை விட ஆண்கள் இளம் வயதில் உயிரிழக்கின்றனர்.
இப்போது இளம் வயதிலேயே மரணம் ஏற்படாமல் இருக்க 30 வயதைத் தாண்டிய ஆண்களை அதிகம் தாக்கும் நோய்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் என்னவென்பதைக் காண்போம்.
இதய நோய்
உலகளவில் ஆண்கள் மற்றும் பெண்களின் உயிரைப் பறிக்கும் முதன்மையான பிரச்சனை இதய நோய் என்றாலும், பெண்களை விட ஆண்கள் இருமடக்கு அதிகமாக இதய நோயால் இறக்கிறார்கள். சிடிசி-யின் கூற்றுப்படி, நான்கில் ஒரு ஆணுக்கு இதய நோய் உள்ளது. ஆகவே தான் இது ஆண்கள் அதிகம் இறப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆகவே 30 வயதை எட்டிய ஆண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்துவதோடு, அவ்வப்போது இதய பரிசோதனைகளையும் செய்து பார்க்க வேண்டும்.
பக்கவாதம்
இதய நோய் மற்றும் அனைத்து வகையான புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, மரணத்தை ஏற்படுத்தும் மூன்றாவது முக்கிய காரணியாக இருப்பது பக்கவாதம். இந்த பக்கவாதம் பெண்களை விட ஆண்களுக்கு ஏற்படும் விகிதம் 1.25 மடங்கு அதிகமாகும்.
மன இறுக்கம்
ஆய்வுகளின் படி, பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் 4 மடங்கு அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மன இறுக்கமாகும். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 6 மில்லியனுக்கும் அதிகமான ஆண்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் அதிகமாக கூட இருக்கலாம். ஏனெனில் பெண்களை விட ஆண்கள் மன இறுக்கத்தின் அறிகுறிகளை வேறுபட்ட முறையில் உணரலாம்.
புரோஸ்டேட் புற்றுநோய்
ஆண்களைத் தாக்கும் ஒரு பொதுவான புற்றுநோய் தான் புரோஸ்டேட் புற்றுநோயாகும். ஆண்கள் புற்றுநோயால் இறப்பதற்கு இது இரண்டாவது முக்கிய காரணமாகும். இதற்கு காரணம் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பற்றி தெரியாமல் இருப்பதும், அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி தெரியாமல் இருப்பதும் தான். ஆனால் இந்த வகை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம். ஆனால் புரோஸ்டேட் புற்றுநோய் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவும் வரை எந்த அறிகுறிகளையும் காட்டாது. ஆகவே இதன் அறிகுறிகளை அறிவது சற்று சவாலாகவே இருக்கும். இருப்பினும், 30 வயதை எட்டிய ஆண்கள் சிறு பரிசோதனையின் மூலம் இப்புற்றுநோயின் தாக்கத்தை அறியலாம்.
சிஓபிடி அல்லது நுரையீரல் நோய்கள்
சிஓபிடி என்பது நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் எம்பிஸிமா போன்ற இரண்டு நுரையீரல் நோய்களைக் குறிக்க மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒரு சொல். இந்நோய்கள் அடிக்கடி ஒன்றாக இருக்கும். இவை இரண்டுமே சுவாசிக்கும் போது காற்றோட்டத்தில் தடையை ஏற்படுத்தும் நிலைமைகள் ஆகும்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் என்பது உடலில் இன்சுலின் குறைபாடு அல்லது இன்சுலின் பயன்படுத்தும் உடலின் திறன் குறைவதைக் குறிக்கலாம். சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை இன்சுலின் அல்லாத (டைப்-2) மற்றும் இன்சுலின் சார்ந்த (டைப்-1) சர்க்கரை நோய். இவற்றில் டைப்-2 சர்க்கரை நோய் பொதுவாக 40 வயதிற்கு பின் தோன்றும். இதனால் 90 முதல் 95 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20 சதவீதம் பேர் ஆண்களாவர்.
மேலே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் ஒவ்வொரு ஆண்களும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவைகளாகும். இவற்றை அறிந்து வைத்திருப்பதன் மூலம், சரியான நேரத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு மரணத்தின் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.