ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில் குருகிராம் மாவட்டத்தில் உள்ள ஒரு உயர் தர உணவகத்திற்கு, சிருஷ்டி பாண்டே என்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சென்றுள்ளார்.
அங்கிருந்த ஊழியர், சிருஷ்டியை உள்ளே அனுமதிக்கவில்லை. அவர் உள்ளே சென்றால் இதர வாடிக்கையாளர்களுக்கு அது அசவுகரியத்தை ஏற்படுத்தும் எனக்கூறி, அவரை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் சிருஷ்டி பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில், சிருஷ்டி பதிவு ஒன்றை வெளியிட்டார். இதைப் பார்த்து பலரும் அந்த உணவகத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர்.
செய்தியாளர்களிடம் நேற்று சிருஷ்டி பேட்டியளித்தபோது, அவரிடம், சம்பந்தப்பட்ட உணவகத்தின் உரிமையாளர் கவும்தேஷ் சிங் தொலைபேசியில் பேசினார்.
சிருஷ்டியிடம் அவர் கூறுகையில், “உணவகத்தில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்கிறேன்,” என்றார். “பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என சிருஷ்டி அவரை வலியுறுத்தினார்.
அதை ஏற்க மறுத்த கவும்தேஷ், தொலைபேசி அழைப்பை துண்டித்தார்; இது சிருஷ்டியை மேலும் கோபமடைய வைத்தது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.