தனுஷும், ஐஸ்ர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 18 ஆண்டுகளாக ஒன்றாக இருந்த அவர்கள் தாங்கள் பிரிவதாக ஜனவரி மாதம் 17ம் தேதி சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.
தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைத்துவிட்டுத் தான் என் அடுத்த பட வேலையை துவங்குவேன் என்று ரஜினி இருக்கிறார். தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவும் ஐஸ்வர்யாவை மீண்டும் அழைத்து வரும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
ரஜினி தன் மீது கோபமாக இருப்பதால் அதற்கு பயந்து மீண்டும் தனுஷுடன் சேர முடிவு செய்துவிட்டார் ஐஸ்வர்யா. ஆனால் இனி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என்கிறாராம் தனுஷ்.
அவர் அடம்பிடிப்பதை பார்த்து பெற்றோர் பேசிப் பார்த்தும் பலனில்லையாம். இந்நிலையில் தான் ரஜினி போனில் பேசியிருக்கிறார். அவர் பேசினால் தனுஷ் மனம் மாறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியும் தன் முடிவை மாற்றுக்கொள்ளவில்லையாம் தனுஷ்.
யார் என்ன சொன்னாலும் இனி நான் சிங்கிளாகத் தான் இருக்கப் போகிறேன் என்கிறாராம். அவரின் மனதை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் குடும்பத்தார் குழப்பத்தில் இருக்கிறார்களாம். இது தான் தற்போது பெரிய பிரச்சனையாக இருக்கிறது
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.