கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள அத்திகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் நேரு (45). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இருவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த அவரது 8 வயது மகளிடம் நேரு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் நேரு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
பின்னர் தகவலறிந்த அவரது தாய் சிறுமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
இது குறித்து குழந்தையின் தாய் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து புகாரின் அடிப்படையில் தலைவமறைவாக உள்ள நேருவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேப்பனபள்ளி அருகே 8 வயது குழந்தையை தந்தையே பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.