இந்து மத நம்பிக்கையின் படி குரங்குகள் அனுமனின் படைகளாக பார்க்கப்படுகிறது. ராமயணத்தில் ராமர் இலங்கைக்கு செல்ல ராமர் பாலத்தை கட்ட உதவியது குரங்குகள்தான்.
இந்தியாவின் பல இடங்களில் பல வகையான குரங்குகள் உள்ளன. இப்படியாக உ.பி மாநிலத்தில் ஒரு கிராமத்தில் இறந்து போன குரங்கிற்கு இறுதி சடங்கு நடத்தினர்.
உ.பி மாநிலம் அவுரையாபாத் மாவட்டம் பாப்ஹூந்த் பகுதியில் குரங்கு ஒன்று எலெக்ட்ரிக் ஒயரில் ஷாக் அடித்து பரிதாபமாக உயிரிழந்தது. அந்த குரங்கிற்கு அந்த ஊர் மக்கள் இந்து மத முறைப்படி இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர்.
குரங்கின் சடலத்தை குளிப்பாட்டி, அதற்கு மாலை போட்டு காவித்துணி போட்டு போத்தி இறுதி சடங்கு நடத்தப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பலர் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பான செய்தி வைரலாகி வருகின்றது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.