உ.பி மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 3ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. 59 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான 16 மாவட்டங்களில் தேர்தல் நடந்தது.
இந்த நாள் திருமண நாளாக இருந்த நிலையில் உ.பி மாநில் ஃபெரோதாபாத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் அவரது வாக்குசாவடியான ஹனுமன்கிரா லக்ஷ்மி கான்வென்ட் பள்ளிக்கு மணக்கோலத்தில் சென்று வாக்களித்தார். அவருடன் அவரது புது கணவரும் உடன் சென்றிருந்தார். அப்பொழுது தம்பதிகள் இருவரும் மணக்கோலத்திலேயே இருந்தனர்.
மணப்பெண் லெஹன்கா மற்றும் மணமகன் கோட் சூட் ஆகிய ஆடைகளை அணிந்து வந்திருந்தனர். இவர்கள் ஓட்டுப்போட வந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.