நிதியாண்டின் (financial year) கடைசி மாதம் என்பதால் பொதுமக்களின் தேவையை கருத்தில்கொண்டு மார்ச் மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் துணைப் பதிவாளர் அலுவலங்கள் செயல்படும் என்று பதிவுத் துறை (2025 பிப்ரவரி 28) நேற்று அறிவித்தது.
அதன்படி, அனைத்து பதிவாளர் அலுவலகங்களும் அனைத்து சனிக்கிழமை காலை 10 மணி முதல் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுல். விடுமுறை நாட்களில் பதிவு செய்வதற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை நாளாக இருக்கும். ஏதேனும், முக்கியமான நாள் உள்ளிட்ட தேவைக்காக மட்டுமே அரசு அலுவலகங்களில் சனி மற்றும் ஞாயிறு வேலை நாட்களாக அறிவிக்கப்படும்.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதமாக கருதப்படும். இந்த மாதத்தில் வருடந்தோறும் முடிக்கப்படாத கணக்குகள் உள்ளிட்டவைகள் முடிக்க பணிகள் நடைபெறும். அதன்படி, இன்று (2025 மார்ச் 1ம் தேதி) முதல் தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை சார்பில் அனைத்து சார்பதிவாளர் மற்றும் துணை பதிவாளர் அலுவலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கையில், “பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள கோரிக்கைகளின் அடிப்படையில், நிதியாண்டின் இறுதி மாதமான 2025 மார்ச் மாதத்தின் அனைத்து பதிவாளர் அலுவலங்களும் சனிக்கிழமைகளில் திறந்திருக்கும்.
அதன்படி, ஆவண பதிவினை ஏற்பதற்கு ஏற்ற வகையில் பதிவு அலுவலகங்களும் காலை 10 மணி முதல் வழக்கம்போல் ஆவண பதிவு முடியும் வரை இயங்கும். இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவண பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும்.” என தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று (2025 மார்ச் 1), மார்ச் 8, மார்ச் 15, மார்ச் 22 மற்றும் மார்ச் 29 ஆகிய தேதிகள் என 5 சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.