தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து 2021-22ம் கல்வி ஆண்டு முன்னிட்டு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டன.
இதை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே உருமாறிய கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் பரவல் தீவிரம் அடைந்தது.
இதன் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் கடந்த டிசம்பர் 24ம் தேதியும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டது.
மேலும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் அடைப்பு என திடீர் கட்டுப்பாடுகளும் அதிரடியாக விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா நோய் பரவல் ஒரளவு குறைந்துள்ளதை தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதோடு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிரடியாக விலக்கி கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து செய்யும் அராஜக செயல் சமீபகாலமாக தொடர்ந்தபடி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருவூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் தங்களுடைய தலைமுடியை ஸ்டைலாக வெட்டி பள்ளிக்கு வந்திருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அந்த மாணவர்களை அருகில் அழைத்து பார்த்தபோது கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், வி ஒன் சைடு, வி கட்டிங் என்று பல ஸ்டைலில் தலைமுடி வெட்டி இருந்தனர்.
இதையடுத்து அந்த மாணவர்களை அழைத்து சென்ற ஆசிரியர் பள்ளி வளாகத்தில் வரிசையாக அமர வைத்து, அனைவருடைய தலைமுடியையும் சீராக வெட்ட ஏற்பாடு செய்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் வரிசையாக சோகத்துடன் அமர்ந்து தலைமுடியை வெட்டிக்கொண்டனர்.
அப்போது ஆசிரியர், ‘இனிமேலும் இதுபோன்று முடி வெட்டிக்கொண்டு வந்தால் பள்ளி வளாகத்திலேயே முடி வெட்டி விடப்படும்’ என எச்சரித்து அனுப்பி வைத்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.