ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் பிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி பாபு இவர் ஒரு சிறிய பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தன் கடைக்கு முட்டை வாங்க அருகில் உள்ள கோழி பண்ணைக்கு சென்று மொத்தமாக முட்டைகளை விலைக்கு வாங்கி வந்துள்ளார்.
கடைக்கு வந்ததும் அவர் வாங்கி வந்த முட்டைகளை பார்த்த போது ஒரு முட்டை மட்டும் வித்தியாசமாக பெருசாக இருந்துள்ளது இதை கண்டதும் அவர் ஆச்சரியமடைந்துள்ளார்.
அந்த முட்டை பார்ப்பதற்கு வெள்ளை நிற மாங்காய் போலவே இருந்துள்ளது. இதனால் ஆச்சரியமடைந்த அவர் தன் கடையில் இருந்த ஒரு மாங்காவையும் அந்த முட்டையையும் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவ பலர் இதை பார்த்து வெள்ளை நிற மாங்காயா என குழம்பினர் ஆனால் இது முட்டை என தெரிந்ததும் ஆச்சரியமடைந்தனர். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.