ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா பண்டா கிராமத்தில் வசிப்பவர் சந்தீப் ஓராவன். இவர் குசும் லக்ரா என்ற பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.
இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதனிடையில், மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு சந்தீப் வேலைக்கு சென்றுள்ளார்.
அந்த வேலைக்காக சுவாதி குமாரி என்பவரும் வந்துள்ளார். ஒருவரை ஒருவர் சந்தித்துகொண்ட இருவரும் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து உள்ளது. வேலைக்கு முடிந்து சென்ற பின்னும் காதல் மழையை பொழிந்துள்ளனர்.
இந்த காதல் விவகாரம் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கு தெரிய வர முதலில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் தொடர்ச்சியாக நீடித்து வந்ததை அடுத்து, கிராமத்தினர் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது.
இதில், 2 பெண்களையும் சந்தீப் மணம் முடிக்க வேண்டும் என தீர்ப்பு முடிவானது. ஆனால், இதற்கு அந்த 2 பெண்களோ அல்லது குடும்பத்தினரோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இதனால் 3 பேரின் ஒப்புதலுடன், நடைமுறையில் இல்லாத இந்த திருமணம் பண்டா கிராமத்தில் இனிதே நடந்து முடிந்தது.
இதுகுறித்து சந்தீப் தெரிவிக்கையில், 2 பெண்களை ஒன்றாக திருமணம் செய்வதில் கூட சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால் இரண்டு பேரையும் நான் காதலிக்கிறேன். அவர்கள் இருவரில் ஒருவரை கூட என்னால் விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்து இருக்கிறார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.