பெற்றோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் பெற்றோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதன்மூலம் இந்திய அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ஒரு ஒரு லட்சம் கோடி வருவாய் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று முதல் பெற்றோல் விலை லிட்டருக்கு 105.41 ரூபாவிலிருந்து 95.91 ரூபாவாகவும், டீசல் விலை லிட்டருக்கு 96.67 ரூபாவிலிருந்து 89.67 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க மாநிலம் மற்றும் மத்திய அரசு வரிகளைக் குறைக்க வேண்டும் என்பதற்கு வழிவகுத்தது.
எவ்வாறாயினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதே எரிபொருள் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.