இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலிகார் (Aligarh) நகரில் உள்ள பாடசாலைக்குள் நுழைந்த சிறுத்தை அங்குள்ள மாணவர் ஒருவரைத் தாக்கியது.
அந்த மாணவர் சிறிய காயங்களுடன் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
வகுப்பறையில் ஒளிந்துகொண்டிருந்த சிறுத்தையைக் கண்டதும் தான் வெளியே ஓடியதாக பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.
5 வயதாகும் அந்தச் சிறுத்தையை மயக்கமடையச் செய்து பிடிப்பதற்கு 11 மணி நேரமானதாக செய்தி வெளியாகியுள்ளது.
அருகிலுள்ள காட்டிலிருந்து அந்தச் சிறுத்தை பாடசாலைக்கு சென்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவற்றின் வசிப்பிடம் சுருங்கிக்கொண்டு இருப்பதால் அவை உணவுதேடி கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் 12,000க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.