தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்தவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் புதிதாக 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நாட்டிலேயே அதிகபட்சமாக அங்கு 32 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் இதுவரை 17 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகம், ஆந்திரா, சண்டிகர் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா ஒருவருக்கும், தெலங்கானாவில் 2 மற்றும் கர்நாடகத்தில் 3 பேருக்கும், குஜராத்தில் 4 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் 6 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியான நிலையில், இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.