கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29-ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு, குடும்ப நல மருத்துவர் ரமணா ராவ் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், புனித் ராஜ்குமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு மருத்துவர் ரமணா ராவ் அளித்த தவறான சிகிச்சை முறையே காரணம் என்று அவரது ரசிகர்கள் குற்றம்சாட்டுவதுடன் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.
இதனால் மருத்துவர் ரமணா ராவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்ஸ் அசோசியேஷன் சார்பில் கர்நாடகா மாநில முதல் மந்திரி பசவராஜ் பொம்மையிடம் முறையிடப்பட்டது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.