காதலனுக்கு பதிலாக தேர்வு எழுதிய காதலி
காதலனுக்கு பதிலாக தேர்வு எழுதிய மாணவி ஒருவர் பிடிப்பட்டதால் படிப்பை இழந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் கல்லுாரி மாணவி ஒருவர் தனது காதலனுக்காக தேர்வு எழுத முடிவு செய்துள்ளார்.
தனது காதலன் சுற்றுலா சென்று இருப்பதால் அவருக்காக தேர்வு எழுத திட்டமிட்ட அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார்.
பின்னர் தேர்வு அறையில் மாணவி தேர்வு எழுதி கொண்டிருந்த போது சந்தேகமடைந்த தேர்வு அலுவலர் அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
அப்போது மாணவி ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தண்டனையாக அவர் தனது படிப்பை இழந்துள்ளார்.
மாணவி ஆள்மாறாட்டம் செய்த நிலையில் கல்லுாரியில் இருந்து மாணவியை கல்லுாரி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
மேலும் அவருடைய காதலன் 3 வருடத்திற்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது. காதலனுக்காக காதலி தேர்வு எழுத சென்று பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[pld_simple_list list_style=”ul”]
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.