கோவை ஆர்எஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் உமா மகேஷ்வன், தொழிலதிபராக இருந்து வருகிறார். இவர் வீட்டில் இரண்டு பெர்ஷியன் பூனைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார்.
இவர் இவர் வளர்த்து வரும் கிஷ்ரா என்ற பூனை 50 நாள் கர்ப்பமாக இருக்கிறது. ஐரிஷ் என்ற பூனை 35 நாள் கர்ப்பமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டு பூனைகளுக்கும் இவர் சமீபத்தில் வளைகாப்பு நடத்தி வைத்தார்.
பொதுவாக தமிழ் கலாச்சாரப்படி பெண்கள் குழந்தை உண்டானால் அவர்களுக்கு வளைகாப்பு செய்து வைப்பது வழக்கம். வளைகாப்பு செய்தால் பிரசவத்திற்கு பின்பு தாயும் சேயும் நலமுடன் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
இந்நிலையில் இவர் தன் வீட்டில் கர்ப்பமாக உள்ள பூனைக்கு வளைகாப்பு செய்து வைத்தார். இதற்கு சிறப்பு விருந்தினர்களாக அந்த பூனைக்கு சிகிச்சை அளிக்கும் கால்நடை மருத்துவர் வேணுகோபால் என்பவரை அழைத்திருந்தார். இவர் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சியில் இவரது உறவினர்கள் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.