திருமணம் முடித்த ஒவ்வொரு தம்பதிக்கும் தேனிலவு என்பது தன் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகும். ஒவ்வொருவரும் தங்கள் தேனிலவை திட்டமிட்டு பயணிப்பார்கள்.
இப்படியாக தேனிலவு நன்றாக இருந்தால் சரி, ஆனால் இது வேறு மாதிரியாக மாறிவிட்டால்? இப்படியாக ஒரு சம்பவம் அண்மையில் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் திருமணம் முடிந்ததும் மணாலி பகுதிக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டனர்.
அவர்களுடன் அவர்களது நண்பர்கள் ஒரு தம்பதியும் சேர்ந்து 4 பேராக தேனிலவு செல்ல திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் ஒரு டிராவல் ஏஜென்ஸியை தொடர்பு கொண்டனர். அவர்கள் ஒரு ஜோடிக்கு ரூ10,302 என்ற மதிப்பில் ஹனிமூன் பேக்கேஜை தேர்வு செய்தனர்.
இவர் திட்டமிட்டபடி மணாலிக்கு சென்ற போது அங்கு இவர்களுக்கு வழங்கப்பட்ட ரூம் இவர்கள் புக் செய்யும் போது இவர்களுக்கு காட்டப்பட்ட ரூம் போல இல்லாமல் வேறு மாதிரியாக இருந்துள்ளது.
இவர்களுக்கு காட்டப்பட்ட ரூமில் பால்கனி வியூ எல்லாம் இருந்துள்ளது. ஆனால் வழங்கப்பட்ட ரூமில் இப்படி பால்கனி இல்லாமல் இருந்துள்ளது. இது குறித்து கேட்ட போது குறிப்பிட்ட ஹோட்டல் நிர்வாகம் பால்கனி ரூமை வழங்க மறுத்துவிட்டனர். டிராவல் ஏஜென்ஸியும் இதற்கு உதவி செய்யவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தம்பதி அந்த ஓட்டலைவிட்டுவிட்டு வேறு ஓட்டலில் தனியாக காசு கொடுத்து தங்கினர். இந்நிலையில் ஹனிமூனை முடித்து வீடு திரும்பியதும் குறிப்பிட்ட ஓட்டல் மற்றும் டிராவல் ஏஜென்ஸி மீது அந்த தம்பதியினர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு மனிதனிற்கு தேனிலவு என்பது வாழ்வில் மறக்க முடியாத ஒன்று அதில் ஏமாற்று வேலை நடப்பதை ஏற்க முடியாது. என கூறி அந்த ஓட்டல் நிர்வாகத்திற்கு ரூ27302 அபராதமாக விதித்தனர். நஷ்டஈடு வழங்க உத்தரவிட்ட செய்தி வைரலாக பரவி வருகிறது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.