உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்செனை தோற்கடித்து தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார். சிறுவனுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இணைய வழியாக நடக்கும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா என்னும் 16 வயது சிறுவன் பங்கேற்றார்.
முதல் 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், 8வது போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்செனை எதிர்கொண்டு விளையாடினார்.
ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டிய பிரக்ஞானந்தா, 39வது நகர்த்தலில் கார்ல்சென்னை வீழ்த்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து தோல்வியடைந்த நிலையிலும், உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சென்னை தோற்கடித்து உலகத்தையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் பிரக்ஞானந்தா.
இவர் 2013ல் நடந்த 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த – தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த #Chess ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது #GrandMaster பிரக்ஞானந்தா-வுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும் என வாழ்த்தியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.