ஒவர் நைட்டில் பிரபலமாவதுடன் நல்ல வருமானத்தையும் பெற யூ டியூப் வலைதளம் ஓபன் பிளாட்ஃபார்மாக உள்ளது. இதனாலயே பலர் அலுவலகத்தில் வேலை பார்த்துகொண்டே தங்களுக்கென்று யு டியூப் சேனலை துவங்கி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஏற்கனவே யூ டியூபில் அக்கவுண்ட் ஆரம்பித்து காமெடி வீடியோக்களை போட்டு வந்த ராஜஸ்தானை சேர்ந்த 16 வயது சிறுமி தான் விரைவில் பிரபலமாகி அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என கூறி ஆன்லைன் மூலம் இளைஞர் ஒருவரை நாடியுள்ளார்.
சிறுமியின் ஆசையை பயன்படுத்திகொண்ட அந்த நபர், நான் சொல்வதை போல யூ டியூபில் வீடியோக்களை போட்டால் சீக்கிரம் நட்சத்திரம் ஆகிவிடுவாய் எனக்கூறி எதிர்ப்பார்ப்பை அதிகபடுத்தியுள்ளார்.
மேலும், அது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், தனிமையில் சந்திக்கலாம் என கேட்டுள்ளார். அதன் பேரில் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி அந்த வாலிபர் ஜோத்பூரில் உள்ள அப்பார்ட்மெண்ட்டுக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.
வீடியோ எடுக்கத்தான் செல்கிறோம் என நினைத்திருந்த சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்ற வாலிபர் கதவுகளை சாத்திவிட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பயத்தில் கத்தி கூச்சலிட்ட சிறுமியை தொடர்ச்சியாக பலாத்காரம் செய்துவிட்டு, விஷயத்தை வெளியில் யாரிடமாவது கூறினால், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
செய்வதறியாமல் தினறிகொண்டிருந்த அந்த சிறுமி ஒரு வழியாக வாலிபரிடம் இருந்து தப்பி வீடு வந்து, நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் காவல் துறையினர் விசாரித்ததில், அந்த நபர் ஜோத்பூரில் உள்ள பாப்ரா (பாலி) ஹாலில் வசித்து வரும் நிஜாமுதீன் என்ற ராஜ் கான் என தெரிய வந்தது.
தொடர்ந்து அவர் மீது போக்சோ, ஆள் கடத்தல் ஆகிய வழக்குகளை பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.