சென்னை அமைந்தகரையில் குடி போதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையின் கழுத்தை அறுத்த மகன் போலீசில் சரண் அடைந்தார்.
செனாய் நகரைச் சேர்ந்த சாகுல்அமீது என்பவருக்கு மனைவி மற்றும் சதாம் உசேன் என்ற மகன் உள்ளனர்.
சாகுல் அமீது தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் மனைவி, மகன் ஆகியோரை அடித்து, உதைத்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்த சாகுல் அமீது தனது மகன் மற்றும் மனைவியிடம் குடிபோதையில் தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சதாம் உசேன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தனது தந்தையின் கழுத்தை அறுத்து விட்டு அமைந்தகரை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.