நீண்டகாலமாக கண்டியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் இயங்கி வந்த சொகுசு விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அதன்போது, விடுதியின் முகாமையாளர், 27 மற்றும் 28 வயதுடைய இரண்டு யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசு வீட்டில் நடத்தப்பட்ட இந்த விபச்சார விடுதி, மசாஜ் நிலையமாக இயங்கி வந்ததாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சொகுசு விபசார விடுதியின் பெண்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.