- Advertisement -
பதுளை கோபோ பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மாணவி, பதுளை நகரில் உள்ள பிரத்தியேக வகுப்புக்கு சென்று நேற்று முன்தினம் (19) காணாமல் போன நிலையில், சடலமாக இன்று(21) காலை மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதியின் பாதணிகள் அடையாள அட்டை, அலைபேசி, புத்தகப்பை என்பன அப்பகுதியில் உள்ள குளத்துக்கு அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
மாணவியின் சடலம் அவரது தாயாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.