திருகோணமலை, கந்தளாய் ரயில் கடவையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் அதிகாரியொருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதோடு, காரின் சாரதியும் பொலிஸ் உத்தியோகத்தருமான மற்றொருவர் படுகாயங்களுடன், கந்தளாய் வைத்தியசாலையில் அதிதீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு (11) 11 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில், மாத்தளை பகுதியைச் சேர்ந்த டி.எல் சிறிசேன (55 வயது) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து கந்தளாய்க்குச் சென்ற கார் ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இந்த விபத்துக்கு பிரதான காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றதெனவும், கந்தளாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.