- Advertisement -
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள 90 பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்று(12) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, மன்னார் மாவட்டம் – மடு கல்வி வலயத்தில் 44 பாடசாலைகளையும், மன்னார் கல்வி வலயத்தில் 46 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.