கல்கிஸ்சை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய மூன்று பாலியல் தொழில் விடுதிகளை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
கல்கிஸ்சை பொலிஸார் இந்த முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன் போது எட்டு பெண்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் மூன்று பேர் விடுதிகளில் முகாமையாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.
கல்கிஸ்சை காலி வீதி, விகாரை வீதி, 4வது ஒழுங்கை ஆகிய பகுதிகளில் இந்த விடுதிகள் இயங்கி வந்துள்ளன.
நீதிமன்றத்தில் பெறப்பட்ட தேடுதல் ஆணைக்கு அமைய பொலிஸார் விடுதிகளை முற்றுகையிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் 22 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.