Thursday, July 31, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home இந்தியச்செய்திகள்

திரைப்படத்தை பார்த்து 3 பேரை தடயமே இல்லாமல் கொலை செய்த தொழிலதிபர்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
April 28, 2022 5:59 am
in இந்தியச்செய்திகள், குற்றம்
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்த உலகில் தினமும் ஏராளமான கொலைகள் நடக்கின்றன. ஒவ்வொரு கொலைக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். பெரும்பாலான கொலைகள் யார் செய்தது என அதை விசாரிக்கும் போலீசார், சாட்சிகள், தடயங்களை வைத்து கண்டு பிடித்து விடுவார்கள்.

ஆனால் வெகு சில கொலைகள் ஏன் நடந்தது, எதற்காக நடந்தது, யார் செய்தது என்று கூட தெரியாமல் இருக்கும் ஏன் சில கொலைகள் நடந்தது கூட தெரியாமல் இருக்கும்.

மண்சரிவில் சுமார் 40 வீடுகள் பாதிப்பு – பலர் காயம்

இப்படியாக சென்னையில் ஒரு சாதாரண விஷயம் போல 3 கொலைகள் நடந்துள்ளது. இந்த கொலைகளை யார் செய்தது எப்படி செய்தார். எதற்காக செய்தார். இந்த கொலைகளை செய்தவர் எப்படி போலீசில் சிக்கினார் என விரிவாக காணலாம் வாருங்கள்

மரணம்

கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சாலையின் ஒரம் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

24 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு ரயில் தொழிற்சங்கங்கள் தீர்மானம்

நெஞ்சு வலி

பின்னர் அவர் யார் என விசாரித்த போது அவர் பெயர் ஜான் பிலோமெனன் என்பது தெரியவந்தது. இவர் எப்படி இறந்தார் என விசாரித்த போது அவர் திடீரென நெஞ்சு வலி வந்து இறந்தது தெரியவந்தது. இவருக்கு எப்படி திடீரென நெஞ்சு வலி வந்தது என தெரியவில்லை நல்ல அரோக்கியமாக இருந்த இவர் திடீரென நெஞ்சு வலியில் இறந்துவிட்டார். போலீசாரும் இயற்கை மரணம் என வழக்கை முடித்தனர்.

இரண்டாவது மரணம்

பின்னர் அதே 2015 மே மாதம் 17ம் தேதி சென்னை அடுத்த உத்திரமேரூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் முதலில் நடந்தது போல சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இவரும் ஜானை போலவே இறுந்துவிட்டார். இதுவும் இயற்கை மரணம் என போலீசார் வழக்கை முடித்தனர். முதல் நடந்த சம்பவத்திற்கும் இரண்டாவது நடந்த சம்பவத்திற்கும் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. மேலும் இந்த இரண்டு நபர்களும் எந்த விதத்திலும் தொடர்புடையவர்கள் அல்ல

3வது சம்பவம்…

அதே 2015 ம் ஆண்டு இரண்டாவது சம்பவம் நடந்து 5 மாதத்திற்கு பிறகு சென்னை மடிப்பாக்கத்தில் ஹென்றி என்ற இளைஞர் சாலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரையும் பிரேத பரிசோதனை செய்து பார்த்த போது இயற்கை மரணம் என தெரியவந்தது. இந்த வழக்கையும் போலீசார் முடித்துவைத்தனர். இந்த மூன்று மரணங்களும் ஒரே மாதிரியாக நிகழ்ந்திருந்தாலும் இதில் இறந்த நபர்களுக்கு ஒருவருக்கு ஒருவர் தொடர்பே இல்லை.

முடிந்த வழக்கு

இந்த 3 சம்பவகளும் நடந்துவிட்டது. இந்த 3 மரணம் குறித்து சந்தேகமே இல்லை என போலீசார் வழக்கையும் முடித்துவைத்துவிட்டனர். காலமும் சென்றுவிட்டது. இந்த 3 சம்பவங்களும் எல்லோரும் மறக்கவே செய்துவிட்டனர். இந்த 3 சம்பவங்களுக்கு பிறகு நடந்த ஒரு திருட்டு சம்பவத்தில் தான் இந்த மரணங்களுக்கு பின்னால் இருந்த பயங்கரமே தெரியவந்தது.

திருட்டு

சென்னை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியை் சேர்ந்த ஸ்டீபன் என்ற 41 வயது நபரின் வீட்டில் ஒரு திருட்டு சம்பவம் ஒன்று கடந்த 2016ம் ஆண்டு ஏப்., 4ம் தேதி நடந்தது. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஏராளமான சொத்துக்கள், நகை, பணம் எல்லாம் வீட்டிலிருந்த நிலையில் எல்லாம் திருட்டு போனது.

திருடர்கள் கைது

இந்த திருட்டு சம்பவத்தை விசாரிக்கும் போது போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அந்த சிசிடிவி காட்சிகளில் திருடர்கள் முகங்கள் பதிவான நிலையில் திருடர்களை போலீசார் அடையாளம் கண்டு திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

டிரைவர்கள் கைது

3ல் 2 பேர் ஸ்டீபனிடம் டிரைவராக பணியாற்றவர்கள் ஒருவர் மட்டும் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். போலீசார் 3 பேரையும் பிடித்த போது அவர்களிடம் இருந்த நகை, பணம், பொருட்களை பறிமுதல் செய்தனர். அப்பொழுது அதனுடன் 9mm துப்பாக்கியும் 1 கிலோ சையனடும் இருந்தது.

அதிரடி திருப்பம்

9mm துப்பாக்கி என்பது போலீசார், ராணுவம் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட துப்பாக்கி இதை சாதாரண மக்கள் பயன்படுத்த அனுமதி வழங்குவதில்லை. அது போக சயனைடும் மிகவும் ஆபத்தான கெமிக்கல் இது எங்கிருந்து கிடைத்தது என அந்த திருடர்களிடம் விசாரித்த போது அவர்கள் ஸ்டீபனின் வீட்டை கையை காட்டினர்.

சயனைடு

இப்பொழுது போலீசாருக்கு சந்தேகம் வந்தது ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு எப்படி துப்பாக்கி சயனைடு எல்லாம் வந்தது என யோசித்தனர். பின்னர் போலீசார் ஸ்டீனிற்கு தெரியாமலேயே அவரை பற்றி விசாரிக்க துவங்கினர். அப்பொழுது தான் ஒரு விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

மனைவியுடன் சண்டை

ஸ்டீபனின் மனைவியின் பெயர் மேரி ரோஸ்லின், அவரது அண்ணன் தான் ஜான் பிலோமினன். அதாவது நாம் முதலில் ஒரு மரணத்தை பார்த்தோமே அவரது தங்கையை தான் ஸ்டீபன் திருமணம் செய்துள்ளார். ஸ்டீபனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. அப்பொழுது தன் மனைவியை ஸ்டீபன் மிரட்டி வந்துள்ளார். இது குறித்து ஜான் தன் தங்கையை அவரது கணவர் மிரட்டுவதாக போலீசில் புகார் வேறு அளித்துள்ளார்.

மீண்டும் பிரேத பரிசோதனை

ஜான் குறித்து போலீசார் விசாரித்த போது அவர் வித்தியாசமான முறையில் இறந்த விசாரணை அறிக்கையை வாங்கினர். அந்த மரணத்தில் தற்போது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. போலீசார் ஜானின் கல்லறையை மீண்டும்தோண்டி அவரது உடலை வெளியே எடுத்துமீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர்.

கள்ள உறவு

இதற்கிடையில் போலீசாருக்கு வேறு ஒரு தகவல் கிடைத்தது. இதே போல உத்தரமேரூர் பகுதியில் ஒருவர் இறந்திருப்பதாக தெரிந்து கொண்டு அந்த வழக்கையும் விசாரிக்க துவங்கினர். அப்பொழுது உத்திரமேரூர்பகுதியில் இறந்த ஸ்ரீதர் என்பவரின் மனைவிக்கும் ஸ்டீபனுக்கும் கள்ள உறவு இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

மூன்றாம் நபருடனும் தொடர்பு

இதனால் போலீசாருக்கு இந்த இரண்டு மரணத்திற்கும் ஸ்டீபனுக்கும் சம்மந்தம் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. பின்னர் போலீசார் இதே போல சென்னை சுற்று வட்டார பகுதிகளில் நடந்த வழக்குகளை எல்லாம் எடுத்து விசாரிக்க துவங்கினர். அதில் மூன்றாவது சம்பவமான ஹென்றி என்பவருக்கும் ஸ்டீபனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

ஹென்றி

ஹென்றியின் மனைவியுடனும் ஸ்டீபன் கள்ள தொடர்பில் இருந்துள்ளார். இதையடுத்து இந்த மூன்று பேரையும் ஸ்டீபன் தான் கொலை செய்திருப்பார் என போலீசார் மன ரீதியில் ஒரு தீர்மானத்திற்கே வந்துவிட்டனர். ஆனால் இந்த கொலை எப்படி நடந்தது என போலீசாருக்கு தெரியவில்லை.

கொலைக்கு திட்டம்

இதையடுத்து போலீசார் அவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தியபோது அவருக்கு தான் செய்த கொலைகளை ஒவ்வொன்றாக ஒப்புக்கொள்ள துவங்கிவிட்டார். அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே இருந்த கருத்து வேறு பாட்டில் மனைவியின் அண்ணன் ஜான் தலையிட்டதால் அவரை தீர்த்து கட்ட நினைத்துள்ளார்.

ஆவணப்படம்

அதற்காக இண்டர்நெட்டில் அவர் எப்படி எல்லாம் போலீசில் சிக்காமல் கொலை செய்யலாம் என யோசிக்க துவங்கியுள்ளார். அப்பொழுது அவருக்கு ஜெர்மன் நாட்டில் எடுக்கப்பட்ட Silenced: Georgi Markov and The Umbrella Murder. என்ற ஆவணப்படம் கிடைக்கிறது அந்த படத்தை பார்க்கிறார்.

ஜியோர்க்கி மெர்கோவ்

அது 1978ம் ஆண்டு ஜியோர்க்கி மெர்கோவ் என்ற பல்கேரிய நாட்டு எழுத்தாளர். லண்டனில் ஒரு விசித்திரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அந்த படம் சொல்கிறது. அதை அம்பர்லா கொலை என அழைக்கிறார்.

இந்த படத்தில் மெர்கோவ் ஒரு முறை பஸ்சில் சென்று கொண்டிருந்த போது அவர் அருகில் ஒரு மனிதர் வந்து நின்றுள்ளார். அப்பொழுது அவர் லேசாக தள்ளாடியுள்ளார். அவர் கையில் வைத்திருந்த குடை கீழே விழ அவர் மெர்கோவ் மீது தவறி விழுகிறார். பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டு செல்கிறார்.

வித்தியாசமான கொலை

அந்த சம்பவத்திற்கு பின்னர் அவரது தொடையில் ஏதோ அரிப்பு போல ஏற்பட்டுள்ளது. அந்த சம்பவம் நடந்த மறுநாள் அவருக்கு திடீரென அதிகமான காய்ச்சல் வந்துள்ளது. அதிலிருந்து 3வது நாள் மெர்கோவ் மரணமடைந்துவிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த போது இவர் பஸ்சில் செல்லும் போது குடை வைத்து இவர் மீது விழுந்தவர் ரிசின் என்ற ஒரு வகை கெமிக்கலை அதை அவர் உடலில் படும்படி செய்துள்ளார். அது தான் அவரது உயிரை பறிந்தது என சொல்லப்பட்டிருக்கும். இந்த வழக்கில் உண்மையாக குற்றவாளியை கண்டுபிடித்தும் அவர்தான் கொலை செய்தார் என நிரூபிக்க முடியவில்லை.

துப்பாக்கி சயனைடு

இந்த கொலை செய்யும் டெக்னிக் ஸ்டீபனிற்கு பிடித்து போக இதற்காக என்ன செய்ய வேண்டும் என தயாரானர். இதற்காக சயனைடை வாங்கினார் சுமார் ஒரு கிலோ சயனைடை கள்ள மார்கெட்டில் ரூ1.5 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். மேலும் கொலை முயற்சியின் போது தான் மாட்டிக்கொண்டால் தப்பிக்க ரூ16 லட்சம் பணம் கொடுத்து ஒரு 9mm துப்பாக்கி ஒன்றையும் வாங்கியுள்ளார்.

படம் போல கொலை

ஜெர்மன் ஆவணப்படத்தில் வருவதை போல ஒரு குடையின் நுனியில் சிரிஞ்ச் ஒன்றை வைத்து அதில் சயனைடை நிரப்பி கொண்டார். சம்பவம் நிகழும் போது ரோட்டில் இவர் கொலை செய்ய வேண்டியவர் நடந்து செல்லும் போது மாறு வேடம் அணிந்த இவர், அவர்கள் மீது தெரியாமல் மோதி அந்த சமயத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் தொடையில் சயனைடு ஊசியை போட்டுள்ளார். அந்த சயனைடு ஊசி மனித உடலுக்குள் சென்றால் 10 நிமிடத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மரணமடைவார்.

கோடி கணக்கில் பணம்

ஜானின் உடலை மீண்டும் பிரேத பிரசோதனை செய்த போது அவரது உடலில் சயனைடு இருந்ததற்கான தடயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை 3 பேரை கொலை செய்த வழக்கில் கைது செய்தனர். இந்த கொலைகளை செய்ததன் மூலம் ஸ்டீபனுக்கு அதிக பணம் கிடைத்துள்ளது. இதனால் அவர் கோடிகளில் பணம் சம்பாதிக்க துவங்கியுள்ளார்.

கைது

அவர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தாலேயே இந்த கொலை சம்பவம் தெரியவந்துள்ளது. இவர் ஜெர்மன் ஆவணப்படம் பார்த்து அது போலவே செயல்பட்டு 3 கொலைகளை செய்துள்ளார். இந்த செய்தி பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அவர் வீட்டில் திருட்டு நடக்கவில்லை என்றாலே திருட்டு குறித்து அவர் போலீசில் புகார் அளிக்கவில்லை என்றாலோ இன்றும் அந்த மரணங்கள் எல்லாம் கொலை என்றே தெரியாமல் போயிருக்கும். இன்று ஸ்டீபன் ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: தொழிலதிபர்
ShareTweetSendShare

Related News

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

July 30, 2025 1:57 pm
மனைவியுடன் தகாத உறவு

மனைவியுடன் தகாத உறவு; கள்ளகாதனை கொலை செய்த கணவன்

July 30, 2025 1:55 pm
வகுப்பறையில் டீச்சர்

வகுப்பறையில் டீச்சர் செய்யுற வேலையா இது! எண்ணெய் தடவி… வைரலாகும் வீடியோ!

July 22, 2025 6:46 am
கணவன்

கணவன் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்… அடுத்து நடந்த விபரீதம்

July 21, 2025 6:28 pm
பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த காதலி

பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த காதலி – குத்திக்கொன்ற இளைஞன்

July 21, 2025 6:27 pm
பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை; வெளியான அறிவிப்பு

July 17, 2025 2:31 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

வெள்ளை யானை ஜோடி

இலங்கையில் வெள்ளை யானை ஜோடி; படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:59 pm
0

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:57 pm
0

மனைவியுடன் தகாத உறவு

மனைவியுடன் தகாத உறவு; கள்ளகாதனை கொலை செய்த கணவன்

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:55 pm
0

ஜப்பானை தாக்கிய சுனாமி

ஜப்பானை தாக்கிய சுனாமி; பாபா வாங்கா கணிப்பு பலித்தது!

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:52 pm
0

முக்கிய செய்தி

சரோஜா தேவி காலமானார்

பழம் பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

by செய்திப்பிரிவு
July 14, 2025 11:56 am
0

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

போட்டோ கேலரி

வெள்ளை யானை ஜோடி

இலங்கையில் வெள்ளை யானை ஜோடி; படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:59 pm
0

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:57 pm
0

மனைவியுடன் தகாத உறவு

மனைவியுடன் தகாத உறவு; கள்ளகாதனை கொலை செய்த கணவன்

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:55 pm
0

ஜப்பானை தாக்கிய சுனாமி

ஜப்பானை தாக்கிய சுனாமி; பாபா வாங்கா கணிப்பு பலித்தது!

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:52 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist