கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள கோட்டே நகரில் மாணவிக்கு முத்தம் கொடுத்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மைசூரு கோட்டே நகரில் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆர்.எம். அனில்குமார். இவர் தனது அறையில் அதே பள்ளியில் படித்து வரும் மாணவிக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
அந்த நிகழ்வினை பள்ளி மாணவர்கள் சிலர் ஜன்னல் வழியாக இருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பூதாகரமான பின்னர் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது.
உடனே பள்ளி நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் நடத்தி, தலைமை ஆசிரியரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. அதனை தொடர்ந்து, தலைமை ஆசிரியர் அனில்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கோட்டே நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதனிடையே, வட்டார கல்வி அலுவலர் சந்திரகாந்த் மற்றும் பொதுக்கல்வித்துறை துணை இயக்குனர் ராமச்சந்திர அர்ஸ் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
பள்ளி மாணவிகள் பல இடங்களில் பாலியல் தொல்லைகளை சந்தித்து வரும் சூழலில் இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக கல்வி அலுவலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரு சில ஆசிரியர்கள் அத்துமீறி நடந்துகொள்ளும் சம்பவங்களுக்கு இடையே பள்ளியின் தலைமை ஆசிரியரே மாணவிக்கு முத்தம் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.