பல திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகள் மற்றும் ஒரு வாயு ரைபிள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மத்தேகொட பகுதியைச் சேர்ந்த 21 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்ட சந்தேக நபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொத்தடுவ, மஹரகம, கஹதுடுவ மற்றும் கடுவெல பொலிஸ் பிரிவுகளில் சந்தேக நபர்களினால் குற்றச் செயல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிலாபம் கொஸ்வத்தையில் மதகுரு ஒருவரை கத்தியால் குத்திய சம்பவத்திற்கும் இந்தக் குழுவே காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மூவரையும் மார்ச் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளதுடன், மற்றைய சந்தக நபர் ஒரு மில்லியன் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.