- Advertisement -
நாடு கொரோனா தொற்று அபாயத்தில் உள்ள போதிலும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மேலும் தளர்த்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் வருத்தமளிப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல் விதிமுறைகள், அழுத்தத்தின் கீழ் எடுக்கப்பட்ட தீர்மானமா என்ற பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹண இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டங்கள் தளர்த்தப்படுவதாலும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பொறுப்பற்ற நடத்தையாலும் நாட்டில் கொரோனா தொற்று விரைவில் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.