நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த மாதம் 17 ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். காதல் திருமணம் செய்து 18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இருவரும் பிரிவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என கூறப்பட்டு வந்தாலும் தனுஷும் ஐஸ்வர்யாவும் இன்னும் வாயே திறக்காமல் உள்ளனர். ஐஸ்வர்யா விருப்பம் தெரிவித்தாலும் தனுஷின் பிடிவாதம் தான் இருவரும் மீண்டும் இணைய தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ் நானே வருவேன் மற்றும் மாறன் ஆகிய படங்களில் பிஸியாக உள்ளார். இதேபோல் ஐஸ்வர்யாவும் ஷூட்டிங், எடிட்டிங் என கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள ஐஸ்வர்யா, தான் செய்யும் வேலைகள் குறித்து அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார்.
நேற்று கேமராவுக்கு முன்பு நின்ற போட்டோவை ஷேர் செய்து உருக்கமாக பதிவிட்டிருந்தார் ஐஸ்வர்யா. இந்நிலையில் தற்போது தனது டீம்முடன் எடிட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். காலையிலேயே தனது டீம் பசங்களுடன் எடிட்டிங்கில் இருப்பதாக கூறி அந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஐஸ்வர்யா.
மேலும் கையில் மைக்குடன் இருக்கும் மற்றொரு போட்டோவை ஷேர் செய்துள்ள ஐஸ்வர்யா, அந்த போட்டோவுக்கு பேக் அப் சொல்கிறோம்… என்ன ஒரு ரைடு இது என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் அக்கா என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.