இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ருபினா திலைக். அவர் தன் கணவர் அபினவ் சுக்லாவுடன் சேர்ந்து பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார்.
இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, நான் நடித்த சீரியல் தான் அந்த நேரத்தில் பிரபலமாக இருந்தது. 5.7 ரேட்டிங் கிடைத்தது. சிறந்த நடிகைக்கான விருது எனக்கு தான் கிடைக்கும் என தெரியும். நான் கஷ்டப்பட்டு உழைத்தேன். அதனால் விருது கிடைக்கும் என்று நம்பினேன்.
நான் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன். பெயரை அறிவித்தார்கள். அதை கேட்டு அழுகையை அடக்க முடியவில்லை. உடனே பாத்ரூமுக்கு ஓடிச் சென்று அங்கு தேம்பித் தேம்பி அழுதேன். அந்த விருது எனக்கு கிடைக்க வேண்டியது.
இரண்டு நாட்களுக்கு பிறகு தான் விருது ஏன் கிடைக்கவில்லை என்பது தெரிய வந்தது. சீரியலில் எனக்கு சகோதரியாக நடித்த பெண்ணும், ஹீரோவும் தென்னாப்பிரிக்காவில் விக்ரம் ஃபட்னிஸ் ஃபேஷன் ஷோவில் கலந்து கொள்ளவிருந்தனர். அதனால் அந்த ஹீரோவுக்கு விருது கிடைத்தது எனக்கு தெரிய வந்தது.
இனி எந்த விருது நிகழ்ச்சிக்கும் செல்லக் கூடாது என்று முடிவு செய்தேன் என்றார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.