கோலிவுட் கொண்டாடிய தம்பதிகளில் ஒன்று தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி. காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.
நாங்கள் ஏதோ ஒரு வேகத்தில் அப்படி சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுவிட்டோம் என்று தனுஷும், ஐஸ்வர்யாவும் தெரிவிக்க மாட்டார்களா என்பதே ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
இந்நிலையில் தனுஷ் பற்றிய உண்மை தெரிந்தும் ஐஸ்வர்யா அவரை திருமணம் செய்தது பற்றி சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
அதாவது தனக்கு 16 வயது இருந்தபோது ஒரு பெண்ணை காதலித்திருத்திருக்கிறார் தனுஷ். அது தான் அவரின் முதல் காதல். அந்த காதல் ஓராண்டிலேயே முடிந்துவிட்டது. இருப்பினும் முதல் காதல் என்பது எப்பொழுதுமே ஸ்பெஷல் அல்லவா?
அந்த முதல் காதல் இருந்த ஓராண்டு தன் வாழ்நாளின் பொற்காலமாக இருக்கும் என்று ஐஸ்வர்யாவிடம் கூறியிருக்கிறார் தனுஷ். திருமணத்திற்கு முன்பே தன்னை பற்றிய இந்த உண்மையை நேர்மையாக கூறிவிட்டார் தனுஷ்.
அவரின் முதல் காதல், தோல்வியை புரிந்து கொண்ட ஐஸ்வர்யா, தனுஷுக்கு நல்ல மனைவியாக, தோழியாக இருந்து வந்தார். அப்படி இருக்கும்போது அவர்கள் பிரிந்ததை தான் திரையுலகினராலும், ரசிகர்களாலும் இன்னும் நம்ப முடியவில்லை.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.