தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து இன்று ஒரு ஹீரோவாக தன்னை நிலைநாட்டி இருப்பவர் விஜய் ஆண்டனி.
தற்போது இவரின் நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை கோலி சோடா, பத்து என்றதுக்குள்ள போன்ற திரைப்படங்களை இயக்கிய விஜய் மில்டன் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து நடிகர் சரத்குமாரும் இந்த படத்தில் நடித்து வருகிறார். நீண்ட காலங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து 1992 ஆம் ஆண்டு தாய்மொழி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். அந்தப் படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடிக்க விஜயகாந்த் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது 20 வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் விஜயகாந்த் தற்போது அதிலிருந்து சிறிது சிறிதாக மீண்டு வருகிறார். இந்நிலையில் அவர் விஜய் ஆண்டனியின் இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுப்பதற்கு சம்மதித்து நடித்து வருகிறார்.
மேலும் விஜயகாந்த், சரத்குமார் இருவரும் இணையும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்து உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.