பாக்கியலட்சுமி இன்றைய ப்ரோமோ
விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்ளும் கோபி பக்கத்து வீட்டிற்கு குடி வருகிறான்.
அவ்வப்போது பாக்கியாவை சீண்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறான். கேட்டரிங் தொழில் செய்து, குடும்பத்தை காப்பாற்றி வரும் பாக்கியா, கூடவே பல பிரச்னைகளையும் சாமாளித்து வருகிறாள்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கேட்டரிங் ஆர்டர் எடுக்கப் போகும் பாக்கியாவிடம் ஆங்கிலத்தில் பேசுகிறாள் ராதிகா. ஆனால் அது புரியாத பாக்கியா என்ன பேசுவதென்று தெரியாமல் முழிக்கிறாள்.
அப்போது இங்கிலீஷ் கூட தெரில, எப்படி ஆர்டர் தருவது என தனது உயர் அதிகாரியிடம் கூறுகிறாள் ராதிகா. அதற்கு, ”யாரும் பிறக்கும் போதே, எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு பிறக்குறது இல்ல. தேவைன்னு வரும்போது தானே தெரிஞ்சுக்குறோம். அதே மாதிரி இதையும் தெரிஞ்சுக்குறேன்” என்கிறாள் பாக்கியா.