சூரியவெவ – மீகஹஜந்துர பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 49 வயதான இருவர் இன்று (08) அதிகாலை காட்டு யானை தாக்குலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யானை – மனித மோதல் அதிகளவில் காணப்படும் பகுதிகளில் யானைகள் பயணிக்கும் பாதைகளில் இரவு நேரத்தில் அவதானமாக பயணிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், இவ்வாறான பகுதிகளில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவையின்றி இரவு நேரங்களில் வெளியில் பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, யானை – மனித மோதல் அதிகளவில் காணப்படும் பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளுக்கான இரண்டாம் தடுப்பை அமைப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.