1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் சுகன்யா. ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டார்
இவர்களது திருமண வாழ்க்கை ஓராண்டு மட்டுமே நீடித்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2003-ம் ஆண்டே இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
செந்தமிழ்பாட்டு, வால்டர் வெற்றிவேல், சக்கரைதேவன், மகாநதி, இந்தியன், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி என பல படங்களில் நடித்துள்ளார்.
சுகன்யா தற்போது இந்தியன் படத்தின் 2-ம் பாகத்தில் கமலுடன் நடித்து வருகிறார். அதன் பின் சன்டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் மலையாளத்திலும் சில டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். இதனிடையே தற்போது தனது சினிமா அனுபவம் குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா என்ன சொல்லிக்கொடுத்தாரே அதைதான் நான் முதல் படத்தில் செய்தேன். அந்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. அவர் சொல்லிக்கொடுத்ததைத்தான் இப்போவும் கடைபிடித்து வருகிறேன். இதன் பிறகு 3-வது படமே விஜயகாந்த் சாருடன் நடித்தேன்.
இந்த படத்தில் நடித்தபோது நான்தான் ஹீரோயின்னு அவருக்கு அறிமுகப்படுத்திவிட்டார்கள் ஆனாலும் அவருடன் நான் அதிகம் பேசவில்லை” என்று கூறியுள்ளார்.