சிம்பு படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்கிறார், லேட்டா வருகிறார், இயக்குநர்களை கதற விடுகிறார், வெயிட் போட்டு அங்கிள் மாதிரி ஆகிட்டார். சிம்புவின் கெரியர் காலி. அவர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார் என்று பேசினார்கள்.
அந்த நேரத்தில் தான் சிம்பு அதிரடி முடிவு எடுத்து தன் உடல் எடையை ஒரேயடியாக குறைத்து ஒல்லியானார். சிம்புவை பார்த்து சிரித்தவர்கள் எல்லாம் வியக்கும்படி செய்தார்.
ஈஸ்வரன், மாநாடு படங்களில் நடித்தார். மாநாடு ரூ. 100 கோடியை தாண்டி வசூல் செய்துவிட்டது. தன் உடல் எடையை குறைக்க ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசம் தான் காரணம் என்றார் சிம்பு.
எந்த சூழலிலும் எனக்காக ஆதரவு அளிக்கும் ரசிகர்களுக்காக நான் திரும்பி வந்துவிட்டேன் என்றார். சிம்புவுக்கு சிக்கன் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். அவர் பிரியாணி சாப்பிடும் புகைப்படங்கள் கூட பலமுறை வெளியாகின.
இந்நிலையில் எடையை குறைத்ததுடன் இனி மாமிசத்தை தொட மாட்டேன், மது அருந்த மாட்டேன் என்று முடிவு கட்டினார் சிம்பு. அன்பே சிக்கன் பிரியாணி, என் ரசிகர்களை தொட்ட கையால் இனி உன்னை தொட மாட்டேன் என்று கூறிவிட்டார்.
நீங்க இல்லாம நான் இல்ல என்று அடிக்கடி ரசிகர்களை பற்றி கூறி வருகிறார் சிம்பு. அவரின் பிறந்தநாளான இன்று பலரும் மனதார வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டாவது சிம்புவின் திருமணத்தை பார்த்துவிட வேண்டும் என்று அவரின் பெற்றோரும், ரசிகர்களும் ஆசைப்படுகிறார்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.