சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்தால் அவர்களின் நண்பர்கள் விலகியிருக்கிறார்களாம்.
சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து பெறப் போகிறார்கள். அதற்கான வேலை நடந்து வருகிறது. தாங்கள் பிரிவது குறித்து அக்டோபர் 2ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர்.
விவாகரத்து பிரச்சனையால் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் நண்பர்களுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா மற்றும் நாக சைதன்யா சினிமா துறையில் இருப்பதால் இருவருக்கும் பொதுவான நண்பர்களே அதிகம். அவர்கள் பிரிவதால் யார் பக்கமும் நிற்க நண்பர்கள் விரும்பவில்லையாம்.
அதனால் வம்பு எதற்கு என்று சமந்தா மற்றும் நாக சைதன்யாவிடம் இருந்து தள்ளி இருக்கிறார்களாம். ஒருவருக்கு ஆதரவு அளித்தால் மற்றவர் கோபிக்கக்கூடும் என்று இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார்களாம்.
சமந்தா, நாக சைதன்யாவிடம் இருந்து தள்ளியிருக்கும் முடிவு தற்போதைக்கு மட்டும் தானாம். இரண்டு பேருமே நல்லவர்கள். அதனால் ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவருக்கு ஆதரவாக இருக்க யாரும் விரும்பவில்லை என்று சமந்தா, நாக சைதன்யாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
விவாகரத்தை அறிவித்த பிறகு சமந்தா பற்றி பலவிதமாக பேசப்படுகிறது. இந்நிலையில் தன் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக மோசமாக செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார் சமந்தா.
மேலும் தனக்கு பலருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறிய டாக்டர் வெங்கட் ராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.