நடிகை சமந்தா, காதல் கணவர் நாக சைதன்யாவை 7 வருட காதலுக்கு பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
விவாகரத்துக்கு, பின்னர் எழுந்த சில வதந்திகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா, தற்போது அதில் இருந்து மீண்டு தற்போது அடுத்த வேலைகளை தொடங்கி இருக்கிறார்.
சினிமா வாய்ப்புகளால் பிசியாக இருக்கும் இவர், அண்மையில் கூட விவாகரத்தை பற்றியும் தெரிவித்து இருந்தார். அதில், நான் மீண்டு வந்தது பெரிய விஷயம் என கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுவரையில் தன்னுடைய விவாகரத்து பற்றி எதுவும் பேசாமல் இருந்து வந்த நாக சைதன்யா முதன் முறையாக அவர் பேசியது வைரலாகி வருகிறது.
அதில், நான் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தேர்வு செய்யும் போது அது ஒரு போதும், எனது குடும்பத்தையும், எங்கள் கௌரவத்தையும் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்.
எனது குடும்ப உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் வேடங்களில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சமந்தா கவர்ச்சியாக நடித்தது நாகசைதன்யா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனாலேயே இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்பட்டது.
மேலும், தற்போது நாக சைதன்யா கூறி இருக்கும் பதிலை வைத்து, சமந்தா திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சர்ச்சையான வேடங்களை தேர்வு செய்து நடித்தது தான் விவாகரத்துக்கு காரணமா? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.