தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழப் போவதாக அறிவித்து ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் ரஜினிகாந்த் அவர்களின் திருமணம் குறித்து பேசியது வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இந்தியா மட்டுமின்றி ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா பல்வேறு நாடுகளிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் ரஜினிகாந்த். 70 வயதை கடந்த போதும் இன்னும் வசூல் மன்னனாக உள்ளார் ரஜினிகாந்த்.
தற்போது தனது 169 படத்தின் பணியில் உள்ளார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கும் தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் யங் லுக்கில் நடிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் குறித்து பேசிய தற்போது வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவாவில் நடைபெற்ற விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அப்போது ரஜினியிடம் டிவி சேனல் ஒன்று பேட்டி கண்டது. அதில் தனுஷை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்ட விஷயத்தில் உங்களுக்கு சம்மதம் தானா? என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த ரஜினி, தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு நான் திருமணம் செய்து வைக்கவில்லை. மீடியாக்காரர்கள்தான் அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தனர். நிர்பந்தம் காரணமாகவே அவர்களது திருமணம் நடைபெற்றது” என்று கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷை விட மூத்தவர். இதனால் எதிர்காலத்தில் பிரச்சனை வரும் என்று அப்போதே குடும்பத்தினர் எடுத்துக்கூறினர். ஆனால் தனுஷுடன் காதல் வயப்பட்ட ஐஸ்வர்யா, தனுஷை தான் திருமணம் செய்வேன் என பிடிவாதமாக இருந்ததால் இருவருக்கும் திருமணம் செய்து வைத்ததாக அப்போதே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.