பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வந்த பிரபல தொகுப்பாளினி அவரது கணவரை பிரிந்துவிட்டதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது சுட்டித்தனமான பேச்சினாலும், கொமடியினாலும் அனைவரையும் கவர்ந்த தொகுப்பாளினி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பின்பு மேலும் பிரபலமானார்.
நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட குடும்ப பிரச்சினை விவகாரங்களை அதிரடியாக பேசுபவர் தான் நடிகர் பயில்வான். சமீபத்தில் கூட ராதிகாவின் அம்மாவை பற்றி தவறாக பேசி இருந்தார்.
அப்பொழுது கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வந்த ராதிகா கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பயில்வான் தொகுப்பாளினி பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினையை பகிரங்கமாக கூறியுள்ளார்.
இவர் கூறுகையில், பிரபல டிவியில் வேலை செய்பவர் தான் பிரியங்காவின் கணவர். இவர் மூலமே பிரியங்கா குறித்த ரிவி சேனலுக்கு வந்துள்ளார்.
தன்னை அடையாளம் காட்டிய நன்றி கடனுக்காக தான் பிரியங்கா அவரை திருமனம் செய்துகொண்டு சில காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.
பின்பு பிரவீனைவிட பணமும் புகழும் அதிகரித்ததால், பிரியங்காவிற்கு ஏற்பட்ட அகந்தை இருவருக்கும் பிரச்சினையாக மாறியது.
இவர்கள் இருவரும் பல மாதங்களாக பிரிந்துதான் வாழ்ந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில்தான் பிரியங்காவிற்கு பிக்பாஸில் இருந்து அழைப்பு வந்தது அங்கேயும் தன்னுடைய கணவர் பற்றி எதுவும் பிரியங்கா பேசவில்லை
பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிரியங்கா கணவரை பார்க்க தானே சென்றிருக்க வேண்டும் ஆனால், அவர் நேராக தாய் வீட்டுக்குத் தான் சென்றாரே தவிர கணவர் வீட்டிற்கு செல்லவில்லை.
இதனால் பல பிரியங்காவின் ஆர்வலர்கள் பிரியங்கா கணவரை பிரிவதற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகவும், குடும்ப நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
கணவர் மீது பிரியம் இருந்திருந்தால் பிக்பாஸில் இருந்து வெளியில் வந்தவுடன் கணவரை சென்று பார்த்து இருக்க வேண்டும்… அல்லது அவருடைய கணவர் பிரியங்காவை வந்து பார்த்திருப்பார்.
ஆனால், இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பதால் தான் இந்த பிரச்சனை எழுந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.