Ponniyin selvan Released: ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
கல்கியின் எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், பொன்னியின் செல்வன். இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள இதில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தை காண ரசிகர்கள் நள்ளிரவு முதல் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். அதனால் திரையரங்கம் பார்ப்பதற்குத் தீபாவளி போல் இருந்தது.
காலை 4 மணிக்கு வெளியான இந்த படத்தை காண மக்கள் இரவு முழுவதும் தூங்காமலிருந்ததாக கூறினார்.
படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட் அனைத்து விற்பனையானது. அதிலும் வார இறுதி நாட்கள் வரை டிக்கெட் முன்பதிவு மொத்தமாக முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.