விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகின்றது.
இந்த சீரியல்4 வருடங்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த அண்ணன் தம்பிகளுக்கு அம்மாவாக நடித்து வந்த நடிகை ஷீலா இறந்துவிட்டதை போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கண்ணன் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடி வரும் காட்சிகளும் காட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது தனத்திற்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.
இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரமான முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. முன்னதாக இந்த கதாப்பாத்திரத்தில் சித்ரா நடித்துவந்தார்.
அவரது இறப்புக்கு பின் இந்த கதாப்பாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்து வருகின்றார். இவருக்கு இந்த சீரியலின் நிறைய ரசிகர் கூட்டம் கிடைத்துள்ளனர்.
இந்நிலையில், நயந்தாரா விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் கவின் நடிக்கும் ஊர்க்குருவி திரைப்படத்தில் காவ்யா அறிவுமணி ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் காவ்யா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி விடுவார் என்பது குறிப்பிடத்தது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.