சமந்தாவும், தனுஷும் இன்று காதல் சங்கடத்தில் இருப்பார்களே என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா தற்போது தனியாக இருக்கிறார்.
2021ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி விவாகரத்து குறித்து இருவரும் அறிவிப்பு வெளியிட்டார்கள். கணவரை பிரிந்த பிறகு படங்களில் பிசியாகிவிட்டார் சமந்தா.
நாக சைதன்யாவை பிரிந்த பிறகு வந்திருக்கும் முதல் காதலர் தினம் இது. ஆசை, ஆசையாய் காதலித்து, அதுவும் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்ட நேரத்தில் பிரிந்துவிட்ட சமந்தாவுக்கு இந்த நாள் மிகவும் சங்கடமான நாளாக இருக்கும் என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.
தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தனுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர். பிரிவுக்கு பிறகு வந்திருக்கும் முதல் காதலர் தினம் இது.
காதல் கணவரை பிரிந்த கையோடு காதல் பாடல் வீடியோவை இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா. முசாபிர் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோ வேலை தான் ஐஸ்வர்யாவுக்கு தற்போது நிம்மதி.
தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பெரிய ஸ்டாரின் மகளுக்கும், மும்பையை சேர்ந்த பையனுக்கும் இடையேயான காதலை திரையில் காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.