சீரியல் நடிகை ஹாசினி என்கிற விசாலினி, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.
சீரியல் நடிகையான ஹாசினி இசையமைப்பாளர் இளையராஜாவின் மருமகள் முறை உறவாகும்.
இவரும் இளையராஜா குடும்பத்தினர் போல் பாடல்கள் பாடியிருக்கிறார். ஆனாலும் பெரிதாக வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தற்போது சின்னத்திரையில் இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபக் காலமாக ஹாசினி பற்றி சர்ச்சையான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் இந்த நாட்டில் இல்லை எனவும் வெளிநாட்டில் செட்டிலாகி விட்டதாகவும் பல கருத்துக்கள் பரவலாக உள்ளது. ஆனால் நான் இங்கு தான இருக்கிறேன். நான் என்னுடைய சொந்த ஊரான சென்னையில்தான் இருக்கிறேன்.
அதேபோ, தொடர்ந்து என்னுடைய நடிப்பு கான்சன்ட் விஜே எல்லாம் பண்ணிக்கொண்டு தான் இருக்கிறேன். அதே மாதிரி கார்ப்பரேட் ஈவண்டுகளையும் தொகுத்து வழங்கிட்டும் இருக்கிறேன்.
அதனால் என்னைப் பற்றி ஏதாவது தவறாக கருத்துக்களை கேட்டால் அதை என்னிடம் உறுதிச் செய்து கொள்ளுங்கள். தயவு செய்து தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.